நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

by Staff Writer 11-05-2020 | 3:10 PM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு ​வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ, ஊவா, மத்திய, வட மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் தென், மேல் மற்றும் கிழக்கு கடற்பிராந்தியங்களில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அவ்வாறு இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன், கடும் காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.