களுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் 10 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

by Staff Writer 11-05-2020 | 3:03 PM
Colombo (News 1st) களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (12) காலை 8 மணி முதல் 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளமையினால் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய வாதுவ, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, களுத்துறை வடக்கு/தெற்கு, கட்டுகுருந்த, நாகொட, பயாகல, பிலிமினாவத்த, மொரகல்ல, அளுத்கம, தர்காநகர் மற்றும் பெந்தோட்ட உள்ளிட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.