பிரித்தானிய ஆய்வுகூடத்தில் தொழிற்பாட்டு கோளாறு

பிரித்தானியாவின் Covid-19 இரத்தமாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பிவைப்பு

by Staff Writer 10-05-2020 | 5:19 PM
Colombo (News 1st) பிரித்தானியா கிட்டத்தட்ட 50,000 மாதிரிகளை பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்துள்ளது. கடந்த வாரத்தில் பிரித்தானிய ஆய்வுகூடங்களில் ஏற்பட்ட தொழிற்பாட்டு கோளாறு காரணமாக இம் மாதிரிகள் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆராய்ச்சி முடிவுகள் பிரித்தானியாவில் உறுதிப்படுத்தப்பட்டு நோயாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன. இதனிடையே, பிரித்தானியாவில் Covid - 19 எச்சரிக்கை கட்டமைப்பொன்று அரசாங்கத்தினால் நிறுவப்படவுள்ளது. பிரதமர் போரிஸ் ஜோன்சன் இது தொடர்பில் இன்று உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.