by Chandrasekaram Chandravadani 10-05-2020 | 4:24 PM
Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கொரோனா வைரஸ் பரவலை கையாளும் விதத்தை முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா விமர்சித்துள்ளார்.
Covid - 19 ஐ முழுமையான குழப்பத்துக்குரிய பேரழிவென கருதி அமெரிக்கா கையாளுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பரில் இடம்பெறவுள்ள தேர்தலில் ஜோ பைடனுக்கு முழு ஆதரவளிக்கவுள்ளதாகவும் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
தமது முன்னாள் நிர்வாக உறுப்பினர்களுடனான தொலைபேசி கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் சுமார் 3000 பேர் இணைந்திருந்ததாக கூறப்படுகின்றது.