by Fazlullah Mubarak 09-05-2020 | 12:18 PM
COLOMBO (NEWS1ST) - யாழில் தனிமைப்படுத்தப்பட்ட 298 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.தென்மராட்சி விடத்தற்பளை 522 ஆவது படையணியின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 298 பேர் அவர்களது சொந்த இடங்களுக்குச் செல்ல இன்று அனுமதிக்கப்பட்டனர்.
கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 188 ஆண்களும், 110 பெண்களும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
18 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில், அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்ட நிலையில் இன்று காலை முகாமிலிருந்து 298 பேரும் வௌியேறினர்.