கொழும்பில் சிக்கியிருந்த மேலும் பலர் வீடுகளுக்கு

மேல் மாகாணத்தில் சிக்கியிருந்த மேலும் 1000 பேர் இன்று சொந்த இடங்களுக்கு

by Fazlullah Mubarak 09-05-2020 | 12:26 PM
COLOMBO (NEWS 1ST) - சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல், மேல் மாகாணத்தில் தங்கியிருப்போரை சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்பட்டது. கொழும்பில் சிக்கியுள்ள சுமார் 1000 பேர் இன்று முற்பகல் கல்கிஸ்ஸ பகுதியிலிருந்து சொந்த இடங்களுக்கு அனுப்பபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் இவர்கள் அனுப்பப்பட்டனர். இதற்கு முன்னரும் இதுபோன்று சொந்த இடங்களுக்கு ஒரு தொகுதி மக்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.