by Staff Writer 09-05-2020 | 8:18 PM
Colombo (News 1st) திருகோணமலை - மொரவெவ 10 ஆம் கட்டை பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார்.
காட்டு யானைகளுக்கான சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியொன்றிலேயே சிறுவன் மோதுண்டுள்ளார்.
இன்று (09) காலை இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் 8 வயதான சிறுவன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சடலம் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சட்டவிரோதமாக மின்வேலியை அமைத்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.