கொழும்பு பங்குச் சந்தை - திங்கள் முதல் வழமைக்கு

கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பம்

by Fazlullah Mubarak 09-05-2020 | 12:01 PM
COLOMBO (NEWS1ST) - கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. முற்பகல் 11 மணி முதல் பகல் 1 மணி வரை கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கொழும்பு பங்குச் சந்தை அறிக்கையூடாக தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே மூடப்பட்டிருந்த பங்குச் சந்தை நடவடிக்கைகள், இயல்பு வாழ்க்கையை மீள ஆரம்பிக்கும்,  அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அமைவாக தமது நடவடிக்கைகளையும் இவ்வாறு கட்டம் கட்டமாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளமை சிறப்பம்சமாகும்.