ஊரடங்கை மீறிய 49,000க்கும் அதிகமானோர் இதுவரை கைது

ஊரடங்கு சட்டத்தை மீறிய 49,000 பேர் கைது

by Fazlullah Mubarak 09-05-2020 | 12:22 PM
COLOMBO (NEWS 1ST) - ஊடரங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 49,000 இற்கும் மேற்பட்டோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண நியூஸ்ஃபெஸ்ட்டுக்கு தெரிவித்துள்ளார். ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட காலப் பகுதியிலிருந்து இதுவரை 12,800 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் கூநியுள்ளார். கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 800 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.