மன்னாரில் குண்டு ஒன்று கண்டெடுப்பு

மன்னாரில் குண்டு ஒன்று கண்டெடுப்பு

by Staff Writer 08-05-2020 | 5:08 PM
Colombo (News 1st) மன்னார் - கீரி கடற்கரையில் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டு, செயலிழக்க செய்யப்பட்டுள்ளது. கடற்கரை பகுதியில் செல் குண்டொன்று காணப்படுவதாக அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்றுள்ளனர். குண்டை அகற்றுவதற்கான நீதவானின் அனுமதி பெறப்பட்டதன் பின்னர், குண்டு அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கடற்கரையில் குறித்த குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.