நுகர்வோர் விவகார அதிகார சபை சுற்றிவளைப்பு

அதிக விலையில் பொருட்கள் விற்பனை: நுகர்வோர் விவகார அதிகார சபை சுற்றிவளைப்பு

by Staff Writer 08-05-2020 | 3:23 PM
Colombo (News 1st) அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு எதிராக சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்த விற்பனையாளர்கள் தொடர்பில் 800-இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த திசாநாயக்க தெரிவித்தார். பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மெலும் தெரிவித்தார். இவ்வாறு அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தொடர்பில் விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் சாந்த திசாநாயக்க தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்