by Bella Dalima 07-05-2020 | 3:32 PM
Colombo (News 1st) நாட்டில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 804 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று (06) மேலும் 26 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 563 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, 232 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 09 பேர் உயிரிழந்துள்ளனர்.