வெசாக் பூரணை தினத்தில் நீர்கொழும்பில் இடம்பெற்ற கொடூர சம்பவம்

by Bella Dalima 07-05-2020 | 8:54 PM
Colombo (News 1st) வெசாக் பூரணை தினமான இன்று மனிதநேயமற்ற கொடூரமான சம்பவம் ஒன்று நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பு - பெரியமுல்ல புனித அந்தோனியார் மாவத்தையில் நாய் ஒன்று சுட்டுக்கொல்லப்படும் கொடூர சம்பவம் CCTV-இல் பதிவாகியுள்ளது. வீட்டிலிருந்து வெளியேறி வீதிக்கு சென்ற நாய் மீது அயல் வீட்டுக்காரரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகிய நாய் சிறிது நேரத்தில் உயிரிழந்தது. நீர்கொழும்பு பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். சம்பவத்துடன் தொடர்புடைய அயலவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அந்நபர் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி என பொலிஸார் தெரிவித்தனர்.