by Staff Writer 07-05-2020 | 2:48 PM
Colombo (News 1st) வெசாக் பண்டிகையை முன்னிட்டு 228 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
நாடளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில் இருந்து இவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் T.M.J.W.தென்னகோன் குறிப்பிட்டார்.
65 வயதிற்கும் மேற்பட்டவர்கள் மற்றும் சிறு குற்றங்களுக்கு தண்டனை பெற்ற கைதிகளே இன்று விடுதலை செய்யப்பட்டதாக அவர் கூறினார்.