பலாலி தனிமைப்படுத்தல் முகாமிலிருந்தவருக்கு கொரோனா

பலாலி தனிமைப்படுத்தல் முகாமிலிருந்தவருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 07-05-2020 | 7:59 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - பலாலி தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து கொரோனா தொற்றாளர் ஒருவர் நேற்று (06) அடையாளம் காணப்பட்டுள்ளார். கொழும்பு - பண்டாரநாயக்க புர பகுதியைச் சேர்ந்த ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். கண்காணிப்பு நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒரு தொகுதியினருக்கு PCR பரிசோதனை இன்று இடம்பெறுவதாக அவர் தெரிவித்தார். PCR பரிசோதனைகள் யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.