ஆற்றில் குளிக்கச்சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி

பதுளையில் ஆற்றில் குளிக்கச்சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

by Staff Writer 07-05-2020 | 2:59 PM
Colombo (News 1st) பதுளை - ஸ்பிரிங்வெலி ப்ளக்பூல் ஆற்றில் குளிக்கச்சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குளிக்கச்சென்ற மூன்று பேரில் 18 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். நீரில் மூழ்கிய இளைஞர் மீட்கப்பட்டு ஸ்பிரிங்வெலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். நேற்று (06) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரிதிபான பகுதியை சேர்ந்த 18 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார். சடலம் மீதான பிரேதப் பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன. பதுளை தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.