தனியாரிடமிருந்து அதிக விலைக்கு உரம் கொள்வனவு  

தனியாரிடமிருந்து அதிக விலைக்கு உரத்தை கொள்வனவு செய்வதாக யாழ். மாவட்ட விவசாயிகள் கவலை

by Staff Writer 07-05-2020 | 5:31 PM
Colombo (News 1st) தன்னிறைவு பொருளாதாரத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு ஊக்கப்படுத்தல்களை முன்னெடுத்து வருகின்றது. எனினும், உர விநியோகத்தில் உள்ள பிரச்சினைகள் காரணமாக விவசாயிகள் சில பகுதிகளில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். யாழ். மாவட்டத்தில் விவசாயிகள் அடிக்கட்டு உரம் உள்ளிட்ட சில உரங்களுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இதனால் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு உரத்தை கொள்வனவு செய்ய நேரிடுவதாகவும் அவர்கள் கவலை வௌியிட்டனர். மானிய உரம் நெற்செய்கைக்கு மட்டும் வழங்குகின்ற நிலையில், மேட்டு நிலச்செய்கையான ஏனைய தானிய மற்றும் மரக்கறி செய்கைகளுக்கு அது கிடைப்பதில்லை. யாழ். மாவட்டத்தில் தற்போது அதிகளவில் மேட்டுநில பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதையும் காண முடிகிறது. விவசாயிகளுக்கு தடையின்றி தேவையான உரத்தை பெற்றுக்கொடுப்பதன் ஊடாகவே தன்னிறைவு பொருளாதாரம் என்ற இலக்கை அடைய முடியும் என யாழ். விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.