by Staff Writer 07-05-2020 | 3:05 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தப்பட்டிருந்த பொலன்னறுவை அபயபுர கிராமம் மீள திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டமையால், அபயபுர கிராமம் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
இதேவேளை, முப்படையினரின் கீழ் இயங்கும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4,882 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
5,130 பேர் இதுவரை கண்காணிப்பு நிறைவடைந்து வீடு திரும்பியுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.
தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 226 பேர் இன்று கண்காணிப்பு காலம் நிறைவடைந்து வீடு திரும்பவுள்ளதாகவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார்.