கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என அறிவிப்பு

கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என அறிவிப்பு

by Staff Writer 06-05-2020 | 3:05 PM
Colombo (News 1st) நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்த கடற்பிராந்தியங்களில் 70-80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பலத்த காற்றின் போது குறித்த கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்