விசேட விமானம் லண்டனிலிருந்து கட்டுநாயக்க வருகை

இலங்கையரை ஏற்றிய விசேட விமானம் லண்டனிலிருந்து கட்டுநாயக்க வந்தடைந்தது

by Staff Writer 06-05-2020 | 3:29 PM
Colombo (News 1st) இலங்கை மாணவர்கள் உள்ளிட்ட சிலரை ஏற்றிய விசேட விமானம் லண்டனிலிருந்து இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. தாயகம் திரும்பும் எதிர்பார்ப்புடன் சில நாடுகளில் தங்கிருந்த 194 பேர் குறித்த விமானத்தில் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் கனடாவில் சிக்குண்டிருந்தவர்களும் அவர்களில் அடங்குகின்றனர். நாட்டை வந்தடைந்துள்ள அனைவரும் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய கடமை நேர முகாமையாளர் குறிப்பிட்டார். இதேவேளை, சிங்கப்பூரில் தங்கியுள்ள மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களை அழைத்து வருவதற்காக இன்றைய தினம் விமானமொன்று சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

ஏனைய செய்திகள்