மோசடி செய்த சமுர்த்தி உத்தியோகத்தர் பணி நீக்கம்

மட்டக்களப்பில் 5000 ரூபா கொடுப்பனவில் மோசடி செய்த சமுர்த்தி உத்தியோகத்தர் பணி நீக்கம்

by Staff Writer 06-05-2020 | 3:18 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - கிரான் பகுதியில் 5000 ரூபா கொடுப்பனவில் மோசடி செய்த சமுர்த்தி உத்தியோகத்தர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னரே குறித்த உத்தியோகத்தர் பணி நீக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா குறிப்பிட்டார். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவில், 4000 ரூபாவை மாத்திரம் சமுர்த்தி உத்தியோகத்தர் வழங்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கூறினார். இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா சுட்டிக்காட்டினார்.

ஏனைய செய்திகள்