ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது

மே மாதத்திற்கான ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது

by Staff Writer 05-05-2020 | 3:31 PM
Colombo (News 1st) மே மாதத்திற்கான ஓய்வூதியக் கொடுப்பனவு இன்றும் (05) நாளையும் (06) வழங்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களிலுள்ள அரச வங்கி மற்றும் தபால் அலுவலகங்களை திறந்து வைக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. ஓய்வூதியம் பெற்றுக்கொள்பவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வங்கிக்கு அழைத்துச் செல்வதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை ஈடுபடுத்தவுள்ளதாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார். ஓய்வூதியம் மாதாந்தம் 10 ஆம் திகதி செலுத்தப்படுவது வழமை என்ற போதிலும், இம்முறை வெசாக் நோன்மதி மற்றும் வார இறுதி விடுமுறை தினமாக அமைவதால், மே மாதத்திற்கான ஓய்வூதியத்தை இன்றும் நாளையும் செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. ஓய்வூதியக்காரர்களை வங்கிகளுக்கு அழைத்துச் செல்வதற்கும் அங்கு அவர்களுக்கு தேவையான மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக மருந்தகங்களுக்கு அழைத்துச் செல்வதற்கும் வைத்திய சிகிச்சையை மேற்கொள்வதற்காக அருகிலுள்ள மருத்துவ மற்றும் ஆயுர்வேத வைத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஏனைய செய்திகள்