600 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

மேல் மாகாணத்தில் சிக்குண்டிருந்த 600 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

by Staff Writer 05-05-2020 | 3:22 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் சிக்குண்டிருந்த சுமார் ​600 பேர் இன்று தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 23 மாவட்டங்களைச் சேர்ந்த நபர்கள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் மேல் மாகாணத்தில் தங்கியிருப்போரை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 7 மணியளவில் நுகேகொடை பொலிஸ் மைதானத்திலிருந்து இவர்கள் அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். தமது சொந்த இடங்களுக்கு செல்லும் குறித்த நபர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளனர். கர்ப்பிணிப் பெண்கள், பெண்கள், பிள்ளைகள், சிகிச்சைக்காக கொழும்பிற்கு வந்து நீண்டகாலமாக வீடுகளுக்கு திரும்ப முடியாமல் இருந்தவர்களே இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.