by Bella Dalima 05-05-2020 | 3:36 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட சிகையலங்கார நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்களை சுகாதார பாதுகாப்பு நடைமுறையின் கீழ் மீளவும் திறக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆலோசனை வழங்கியுள்ளார்.
அழகுக்கலை துறையின் நிபுணர்களின் பங்கேற்புடன் நேற்று மாலை சுகாதார அமைச்சில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களின் கீழ், சமூக இடைவௌியை பேணி, பணிகளை முன்னெடுக்க வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், பெருந்தோட்டப் பகுதிகளில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாது, சிகையலங்கார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.