50 வீதமானோருக்கு நோய் அறிகுறிகள் தென்படவில்லை

கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 50 வீதமானோருக்கு நோய் அறிகுறிகள் தென்படவில்லை - சுகாதார அமைச்சர்

by Bella Dalima 05-05-2020 | 6:37 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 50 வீதமானோருக்கு நோய் அறிகுறிகள் தென்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இதனால், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவௌியை பேணி பாதுகாப்பாக செயற்படுமாறு சுகாதார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.