யாழ். எழுதுமட்டுவாழ் பகுதியில் 40 வயதான நபர் கொலை

யாழ். எழுதுமட்டுவாழ் பகுதியில் 40 வயதான நபர் கொலை: மூவர் கைது

by Staff Writer 04-05-2020 | 4:07 PM
Colombo (News 1st) யாழ். மிரிசுவில் வடக்கு எழுதுமட்டுவாழ் பகுதியில் இடம்பெற்ற கொலை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நபரொருவர் தனது அயல் வீட்டாரினால் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறே கொலைக்கான காரணமென பொலிஸார் தெரிவித்தனர். கிடைத்த தகவலுக்கமைய கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சம்பவத்தில் எழுதுமட்டுவாழ் வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக சாவகச்சேரி தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.