by Staff Writer 04-05-2020 | 3:08 PM
Colombo (News 1st) மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 46,397 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் 12,049 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை 06 மணி தொடக்கம் பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கை மீறிய 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 36 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனிடையே, கொழும்பு , கம்பஹா , களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இன்று அதிகாலை 05 மணி தொடக்கம் இரவு 08 மணி வரை 15 மணித்தியாலங்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
குறித்த 21 மாவட்டங்களிலும் நாளை மறுதினம் (06) வரையில் இந்த நடைமுறை அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் நாளை மறுதினம் இரவு 08 மணி முதல் 11 ஆம் திகதி அதிகாலை 05 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.