பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் விசேட கூட்டம்

பிரதமருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் விசேட கலந்துரையாடல்

by Staff Writer 04-05-2020 | 1:24 PM
Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று காலை (04)  அலரி மாளிகையில் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இன்று காலை 10.30 இற்கு ஆரம்பமான இந்த கலந்துரையாடலில், அண்மையில் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் , சுகாதார அதிகாரிகள் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மற்றும் COVID-19 ஒழிப்பிற்கான ஜனாதிபதி விசேட செயலணியின் தலைவர் ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர். எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.