by Bella Dalima 04-05-2020 | 7:47 PM
Colombo (News 1st) கொரோனா தொற்று காரணமாக 72 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இத்தகவலை உறுதிப்படுத்தினார்.
குருணாகல் - பொல்பித்திகம பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதனால் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 721 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றிலிருந்து இதுவரை 194 பேர் குணமடைந்துள்ளனர்.