5000 ரூபா கொடுப்பனவிற்காக 24 பில்லியன் ஒதுக்கீடு

ஓய்வூதியம், முதியோர் கொடுப்பனவு , 5000 ரூபா கொடுப்பனவிற்காக 24 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

by Staff Writer 04-05-2020 | 6:16 PM
Colombo (News 1st) ஓய்வூதியம், முதியோர் கொடுப்பனவு மற்றும் 5000 ரூபா கொடுப்பனவிற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 24 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் S.R.ஆட்டிகல தெரிவித்துள்ளார். இந்த நிதி அரச வங்கி உள்ளிட்ட நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனடிப்படையில், நாளை (05) முதல் மே மாதத்திற்கான ஓய்வூதியதாரர் கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.