கிம் ஜாங் உன் பொதுவௌியில் பிரசன்னமானார்

20 நாட்களின் பின்னர் கிம் ஜாங் உன் பொதுவௌியில் பிரசன்னமானார்

by Bella Dalima 02-05-2020 | 3:47 PM
Colombo (News 1st) 20 நாட்களின் பின்னர் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் பொதுவௌியில் பிரசன்னமாகியுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது. உர தயாரிப்பு நிலையம் ஒன்றை அவர் திறந்து வைக்கும் காணொளிக்காட்சி வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் அவர் அங்கு வருகை தந்த போது, குறித்த தொழிற்சாலையின் ஊழியர்கள் உட்பட அங்கு கூடியிருந்தவர்கள் உற்சாக வரவேற்பளித்ததாகவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த 20 நாட்களாக இருதய சிகிச்சை காரணமாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.