பொதுத்தேர்தல் தாமதமாகும் சாத்தியம்

by Staff Writer 02-05-2020 | 8:19 PM
Colombo (News 1st) தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தது. பொதுத்தேர்தல் தொடர்பில் கலந்துரையாடி திகதியை தீர்மானிப்பதற்காகவே இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழு கூடியதை அடுத்து பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகளின் செயலாளர்களை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சந்தித்தனர். சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த இந்த சந்திப்பு, தேர்தல் திகதி தொடர்பில் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில் முடிவுற்றது.