கொரோனா தொற்றாளர்கள் 10 பேர் குணமடைந்துள்ளனர்

by Staff Writer 02-05-2020 | 3:54 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றாளர்கள் 10 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 172 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது. 511 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 179 பேர் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.