அதிக விலையில் உரம் விற்றால் அனுமதி இரத்து

அதிக விலையில் உர விற்பனையில் ஈடுபட்டால் அனுமதிப்பத்திரம் இரத்து

by Staff Writer 02-05-2020 | 3:32 PM
Colombo (News 1st) அதிக விலையில் உர விற்பனையில் ஈடுபடும் விநியோகஸ்தர்களின் விற்பனை முகவருக்கான அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் என தேசிய உரச் செயலகம் அறிவித்துள்ளது. நெல் தவிர்ந்த ஏனைய பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் உரங்கள் 50 கிலோகிராம் மூடைக்கான விலை 1000 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. கலப்பு உரம் ஒரு மூடை 1150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிர்ணய விலைக்கு மேலதிகமாக உரத்தை விற்பனை செய்வோருக்கு எதிராக முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 0113 40 39 31 அல்லது 0113 40 37 94 ஆகிய இலக்கங்களுக்கு முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என தேசிய உரச் செயலகம் அறிவித்துள்ளது.