நாட்டின் பல பகுதிகளில் டெங்கு பரவும் அபாயம்

நாட்டின் பல பகுதிகளில் டெங்கு பரவும் அபாயம்

by Staff Writer 30-04-2020 | 3:18 PM
Colombo (News 1st) மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வட மேல் மாகாணங்களில் டெங்கு பரவும் அபாயம் அதிகரிக்கக்கூடும் என சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேல் பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக டெங்கு பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் விசேடவைத்திய நிபுணர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார். இதனால், டெங்கு பரவக்கூடிய மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுபாட்டு செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் விசேடவைத்திய நிபுணர் அருண ஜெயசேகர குறிப்பிட்டுள்ளார். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 18,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இருப்பினும் டெங்கு காரணமாக இதுவரை எவரும் உயிரிழக்கவில்லை என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.