எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

by Staff Writer 30-04-2020 | 3:24 PM
Colombo (News 1st) எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளனர். எலிக்காய்ச்சலுக்கான மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, விவசாய நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க முன்னர் தமது பகுதிகளுக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்களிடம் மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்ளுமாறு அவர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.