by Staff Writer 29-04-2020 | 2:47 PM
Colombo (News 1st) ஹட்டன் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
சுகாதாரத் தரப்பினரின் அறிவுறுத்தலுக்கு அமைய இன்று (29) முதல் போக்குவரத்தில் ஈடுபட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இணங்கியுள்ளனர்.
சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய போக்குவரத்தில் ஈடுபடும் பட்சத்தில் பாரிய நட்டம் ஏற்படும் என தெரிவித்து குறித்த சங்கத்தின் சில உறுப்பினர்கள் நேற்று சேவையில் இருந்து விலகியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஹட்டன் பொலிஸ் அதிகாரிகளுக்கும் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று இது தொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
பெருந்தோட்ட பகுதிகள் கொரோனா வைரஸ் பரவலை தவிர்க்கும் நோக்கில், சுகாதாரத் தரப்பினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இன்று முதல் போக்குவரத்தில் ஈடுபடுவதாக சங்கத்தின் உப தலைவர் எம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.