Colombo (News 1st) கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தனியார் வர்த்தக நிறுவனங்கள் தொடர்பில் தகவல்களை சேகரிக்க தொழில் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தனியார் வர்த்தக நிறுவனங்கள் தொடர்பிலான கணக்கெடுப்பொன்றை நடத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
www.labourdept.gov.lk எனும் இணையத்தளத்தினூடாக தனியார் வர்த்தகர்கள் இது தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு துரிதமாக பதிலளிக்குமாறு தொழில் திணைக்களம் வர்த்தகர்களை அறிவுறுத்தியுள்ளது.