கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 611 ஆகியது

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 611 ஆக உயர்வு

by Staff Writer 28-04-2020 | 8:30 PM
Colombo (News 1st) Update : 28/04/2020; 8.05 PM: மேலும் 12 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 611 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. --------------------------------------------------------------------------------------------------------------------------------- Update : 28/04/2020; 7.30 PM: மேலும் 3 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 599 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. --------------------------------------------------------------------------------------------------------------------------------------- Update : 28/04/2020; 5 PM: நாட்டில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 596 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (28) அடையாளம் காணப்பட்ட 8 கொரோனா நோயாளர்களில் கடற்படையினர் ஐவரும் புனானை தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த மூவரும் அடங்குகின்றதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். -------------------------------------------------------------------------------------------------------------------------------------- 28/04/2020; 2.12 PM: நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 592 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.