24 மணி நேரத்தில் ஊரடங்கை மீறிய 1,128 பேர் கைது

கடந்த 24 மணி நேரத்தில் ஊரடங்கை மீறிய 1,128 பேர் கைது

by Staff Writer 28-04-2020 | 8:00 PM
Colombo (News 1st) இன்று (28) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 1,128 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த காலப்பகுதிக்குள் 303 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 41 ஆயிரத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில் 10,560 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.