O/L பரீட்சைப் பெறுபேறுகள் வௌியீடு

O/L பரீட்சைப் பெறுபேறுகள் வௌியீடு

by Chandrasekaram Chandravadani 27-04-2020 | 3:17 PM
Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார். அதற்கமைய, பரீட்சைப் பெறுபேறுகளை https://www.doenets.lk/examresults என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.   இம்முறை பரீட்சைக்கு ​தோற்றிய பரீட்சார்த்திகளில், 73.84 வீதமானோர் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். பரீட்சையில் 10,346 பரீட்சார்த்திகள் 9 A சித்திகளை பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இம்முறை பெறுபேறுகளுக்கு அமைய கணித பாடத்தில் 66.82 வீதமானோர் சித்தி பெற்றுள்ளனர். கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த டிசம்பர் 2 ஆம் திகதி முதல் டிசம்பர் 12 ஆம் திகதி வரை 4,989 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற்றது. 7,17,246 பரீட்சார்த்திகள் தோற்றியதுடன், பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 4 இலட்சத்து 33 ஆயிரத்து 189 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்பதுடன் இரண்டு இலட்சத்து 84 ஆயிரத்து 57 பேர் தனியார் பரீட்சார்த்திகளாவர்.