நாளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்

BREAKING NEWS - நாளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்

by Chandrasekaram Chandravadani 26-04-2020 | 8:10 PM
Colombo (News 1st) விடுமுறைக்கு சென்றுள்ள முப்படையினரை முகாம்களுக்கு அழைப்பதற்காக நாளை (27) நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.