மக்களுக்கான கொடுப்பனவுகள் 10 ஆம் திகதிக்கு முன்னர்

மக்களுக்கான கொடுப்பனவுகள் 10 ஆம் திகதிக்கு முன்னர்

by Staff Writer 26-04-2020 | 3:02 PM
Colombo (News 1st) ஓய்வூதிய கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொடுக்க முடியும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கு தேவையான நிதி திரைச்சேரியிடம் காணப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் S.R. ஆட்டிகல குறிப்பிட்டுள்ளார். ஓய்வூதிய கொடுப்பனவு, விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவு, சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு, சமுர்த்தி, முதியோர் கொடுப்பனவு உள்ளிட்ட கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அரச ஊழியர்களுக்கான மே மாதத்திற்குரிய சம்பளத்தை மே மாதம் 25 ஆம் திகதி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் S.R. ஆட்டிகல சுட்டிக்காட்டியுள்ளார்.