Covid19 பரிசோதனை மேற்கொள்ள மருந்தகங்களுக்கு அனுமதி

நியூயோர்க்கில் Covid-19 பரிசோதனைகளை மேற்கொள்ள மருந்தகங்களுக்கு அனுமதி

by Chandrasekaram Chandravadani 26-04-2020 | 4:52 PM
Colombo (News 1st) அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் Covid-19 பரிசோதனைகளை மருந்தகங்களில் மேற்கொள்ள முடியுமென ஆளுநர் அன்ட்ரு கியூமோ (Andrew Cuomo) தெரிவித்துள்ளார். நியூயோர்க்கிலுள்ள 5,000 மருந்தகங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மாநில ஆளுநர் அன்ட்ரு கியூமோ தெரிவித்துள்ளார். இதனூடாக ஒரு நாளில் சுமார் 40,000 பேர் Covid-19 வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 938,000 இற்கும் அதிகமானோர் Covid-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.