கடந்த 24 மணி நேரத்தில் 1211 பேர் கைது

கடந்த 24 மணி நேரத்தில் 1211 பேர் கைது

by Staff Writer 26-04-2020 | 2:48 PM
Colombo (News 1st) இன்று (26) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 1,211 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் காலப்பகுதியில் 348 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 38,566 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 9,909 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.