வவுனியாவில் குழியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

வவுனியாவில் நீர் விநியோகத்திற்காக வெட்டப்பட்ட குழியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

by Staff Writer 25-04-2020 | 5:06 PM
Colombo (News 1st) வவுனியா - சிவபுரம் வீதியில் நீர் விநியோகத்திற்காக வெட்டப்பட்ட குழியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நீர் விநியோகத்திற்காக வெட்டப்பட்ட குழியில் சைக்கிளுடன் ஒருவரின் சடலம் இருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது. 4 ஆம் கட்டை கற்பகபுரத்தை சேர்ந்த ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெலுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.