பயணிகள் விமான போக்குவரத்திற்கான தடை நீடிப்பு

பயணிகள் விமான போக்குவரத்திற்கான தடை நீடிப்பு

by Staff Writer 25-04-2020 | 2:58 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கன் விமான சேவையின் பயணிகள் விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 15 வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் சரக்கு விமான போக்குவரத்து தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தேவையேற்படின் விசேட பயணிகள் விமான சேவையை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.