கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 420 ஆக அதிகரிப்பு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 420 ஆக அதிகரிப்பு

by Staff Writer 25-04-2020 | 2:37 PM
Colombo (News 1st) நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 420 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3 கொரோனா நோயாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று கொரோனா தொற்றாளர்கள் 49 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதற்கிணங்க, வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 65 உறுப்பினர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதனிடையே, கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் 297 மருத்துவ கண்காணிப்பின் கீழ் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, கொரோனா நோயாளர்கள் மேலும் 7 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா நோயாளர்கள் ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.