கடற்படையினரின் விடுமுறை இரத்து

கடற்படை உறுப்பினர்களின் விடுமுறை இரத்து

by Staff Writer 25-04-2020 | 2:51 PM
Colombo (News 1st) அனைத்து கடற்படை உறுப்பினர்களினதும் விடுமுறை மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது. எந்த கடற்படை வீரரும் தமது முகாமிலிருந்து வௌியேறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை வழமைக்கு திரும்பும் வரை விடுமுறைகள் இரத்து செய்யப்படும் என அவர் கூறியுள்ளார். கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள படையினருடன் தொடர்புகளை பேணியவர்கள் தொடர்பிலான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா கூறியுள்ளார். குறித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.