ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது

by Staff Writer 24-04-2020 | 8:24 PM
Colombo (News 1st) ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை ஹங்குரங்கெத்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ஹங்குரங்கெத்த - தியதிலகபுர பிரதேசத்தில் நேற்றிரவு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, சந்தேகநபரின் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 42 கிராம் ஹெரோயின் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது. நவகமுவ பொலிஸ் நிலையத்தை சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். மேலதிக விசாரணைகளுக்காக வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

ஏனைய செய்திகள்